Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: ராசிபுரம் போக்குவரத்து காவல் துறை சார்பில், ராசிபுரம் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ராசிபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ்.ஜெய்சங்கரன் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள், சாலை விபத்துகள் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை முறைகள், சாலை விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்டுவது குறித்தும், ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் பள்ளி தலைமையாசிரியை மோனிகா, போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர்கள் கே.நடராஜன், பி.முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.